திருவாரூரில் கொட்டும்மழையில்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலைபார்ப்பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு திருவாரூரில் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மின்சார மேற்பார்வையாளர் அலுவலக வாயிலில் மாலை 5 மணிக்கு ஒப்பந்த மின்வாரிய தொழிலாளர்கள் திரண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை காற்றோடு வீசியது, அதையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி போராட்டத்தை நடத்தினர்.
- க.செல்வகுமார்