Skip to main content

இதை செய்தால் மீட்பது எளிது - ஆன்லைன் பணம் திருட்டு குறித்து சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

Easy to recover if reported within 24 hours-Cybercrime alert regarding online money theft!

 

நேற்று சென்னை வில்லிவாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அன்பரசு என்பவரிடம் ஏடிஎம் கார்டை புதுப்பித்துத் தருவதாகக் கூறி ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாய்  திருடப்பட்ட நிலையில் 24 மணிநேரத்தில் பணத்தை சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றியதோடு, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பது தொடர்பாக போலீசார் விளக்கமும் கொடுத்துள்ளனர்.

 

ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அன்பரசு 50 லட்சம் ரூபாயை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வைப்பு தொகையாக டெபாசிட் செய்துள்ளார். ஆனால் அந்த தொகையை வங்கி நிர்வாகம் வைப்பு தொகையில் இருந்து சேமிப்பு தொகையாக மாற்றியுள்ளது. ஆனால் அதை மீண்டும் வைப்பு தொகையாக மாற்ற வேண்டும் என முயற்சி செய்துகொண்டிருந்த அன்பரசுவுக்கு வங்கியிலிருந்து அனுப்பப்படுவதாக நேற்று செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

 

Easy to recover if reported within 24 hours-Cybercrime alert regarding online money theft!

 

அந்த குறுஞ்செய்தியை கிளிக் செய்த அன்பரசு லாகின் செய்து உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வர ஓ.டி.பி எண்ணை அந்த மர்ம நபரிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் இறுதியில் அந்த அழைப்பு குறித்து சந்தேகம் அடைந்த நிலையில் அன்பரசு செல்போனை அவரது மகனிடம் கொடுத்து சோதனை செய்தபோது, 6 தவணையாக அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 53 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ந்து போனார்.

 

இதுகுறித்து உடனடியாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து செயல்பட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் 53 லட்சம் ரூபாயும் திருடப்பட்ட நபரின் கணக்கு செல்லாமல் தடுத்து பணத்தை பாதுகாத்துள்ளனர். ஆன்லைன் மூலம் இது போன்று வங்கி மோசடி திருட்டுகள் நடைபெறுவதால் தேவையற்ற குறுந்தகவல்களை திறப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினர், பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். அப்படி 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்கும் பட்சத்தில் பணத்தை மீட்பது எளிது எனவும் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.