Skip to main content

விலையை உயா்த்தி, எங்களை கொலை செய்யாதீா்கள் – பி.ஆர்.பாண்டியன் 

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

Do not kill us by inflating the price - PR Pandian

 

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீதம் பேருக்கு கூட நிவாரணம் சென்றடையவில்லை.

 

மேலும், மீதம் உள்ள விவசாயிகளுக்கு அந்த நிவாரணத்தை வழங்க அரசிடம் வலியுறுத்தினால், தோ்தல் நடத்தை விதிமுறையைக் காரணம் காட்டுகிறார்கள். விவசாய கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசு, விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்தனர். இருந்தபோதிலும் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு நகைகளைத் திருப்பி தராமல், தோ்தல் நடத்தை விதிமுறையைக் காரணம் காட்டுகிறார்கள். 

 

மேலும் விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், விலையேற்றம் என்ற பெயரால், அரசு ஒருபக்கம் விலையை உயா்த்தி, எங்களைக் கொலை செய்ய பார்க்கிறார்கள். ஏடிபி உரம் 1,400 ரூபாயிலிருந்து 1,900 ரூபாயாக உயா்த்தப்பட்டுள்ளது. சரியான நிவாரணம் வழங்கப்படவில்லை. எதற்கெடுத்தாலும் தோ்தல் விதிமுறையை முன் வைக்கும் அரசு, விலை உயர்வுக்கு மட்டும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பது தெரியாதா? மத்திய அரசானது விவசாய இடுபொருட்களின் விலையை உற்பத்தி நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

 

அவா்களும், தங்கள் விருப்பம் போல ஆண்டுக்கு ஏடிபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை உயா்த்தி எங்களைக் கடனாளிகளாக மாற்றுகின்றனா். ஒவ்வொரு மூட்டைக்கும் 500 ரூபாய் உயா்த்தினால் விவசாயிகளின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை. எனவே தோ்தல் ஆணையம் இதற்கு ஒரு தீா்வு காண வேண்டும் என்றும், நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி, உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க பிரதமா் மோடி முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.