Skip to main content

உணவுக்காடு அமையுங்கள்..தைல மரங்கள் வேண்டாம்!! வனவிலங்குகளுக்காகப் போராடும் கிராம மக்கள்!!!!

Published on 26/08/2018 | Edited on 27/08/2018

பல்லுயிர் பெருக்கத்திற்குத் தேவையான உணவுக்காடுகளை அமையுங்கள்.! தைல மரங்கள் எனப்படும் யூகலிப்டஸ் மரங்களை இங்கு நட வேண்டாம்.! இதனால் நீர் ஆதாரங்களும், வனவிலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது", என தைலமரங்களை நடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டுள்ளனர்.

 

PROTEST

 

 

 

வனத்தோட்டக் கழகத்தால் விளைவிக்கப்படும் தைல மரங்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளன. மரங்கள் பயிடப்பட்ட இடங்களை சுற்றி அகழிகளைத் தோண்டி பாத்திக் கட்டி உழவு செய்வதால் கண்மாய், குளம், குட்டைக்கு செல்ல வேண்டிய மழை வெள்ளம் இங்கேயே தங்கிவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இவ்வேளையில், " நீராதாரங்களை அழித்தது மட்டுமில்லாமல், வனவிலங்குகளையும் அழித்து வருகின்றது இந்த தைல மரங்கள். இதனை இங்கு நடக்கூடாது என உழுது செம்மைப்படுத்தியுள்ள இடங்களையொட்டிய தைலக்காடுகளில் புகுந்து சுமார் 250 பெண்களுடன் இணைந்து ஏறக்குறைய 500 ஆண்களுமாக சேர்ந்து காலையிலேயேப் போராட்டத்தை துவக்கியுள்ளனர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள நாகவயல் கிராமத்தினர்.

 

PROTEST

 

 

 

"தங்குவதற்கும், தின்பதற்கும் ஏற்றதல்ல இந்த மரங்கள். வெம்மையை மட்டும் உற்பத்தி செய்யும் இந்த தைல மரங்களில் எந்தவொரு பறவையும் கூடு கட்டாது. வசிக்காது. இனப்பெருக்கமும் செய்யாது.! வனத்துறையின் முக்கியக் கடமையே வனத்திலுள்ள உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே.! சிவகங்கை மாவட்டத்திலுள்ள காடுகளில் தான் எங்கும் இல்லாமல் மான்கள் அதிகமாக வசிக்கின்றது. அத்தி, ஆலம், இலுப்பை, பலா, வேங்கை, சீதா, நாவல் பழ மரங்கள் உள்ளிட்ட மரங்களால் தான் அவைகள் அங்கேயே இரை தேடி பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாக இருந்து வந்தது. இப்பொழுது அத்தனை மரங்களையும் அழித்துவிட்டு தைலமரங்கள் நடுவது என்ன லாபம்..? இதனால் மான்கள், குரங்குகள் உள்ளிட்டவைகள் காட்டை விட்டு வெளியில் வந்து நாய் கடித்தோ, வாகனத்தில் அடிப்பட்டோ இறக்கின்றன. தைல மரங்களை புறக்கணித்துவிட்டு உணவுக்காடுகளை அமையுங்கள். இதனால் நம்முடைய சந்ததிகள் வளரும். இல்லையெனில் தைலமரங்களை நடவிட மாட்டோம்." என பேச்சு வார்த்தையைத் தொடங்க வந்த காவல்துறை, வருவாய்துறை மற்றும் வனத்துறையினரிடம் பேசி வருகின்றனர் கிராம மக்கள். இதனால் இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.