Published on 19/10/2020 | Edited on 19/10/2020

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ் தேர்தெடுக்கப்பட்டதற்கு வருகின்ற தேர்தலில் அதிமுக தோல்வியடையும் என்பதாலே ஓ.பி.எஸ். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கில் சிக்க நேரிடும் என்பதால்தான் தமிழகத்தின் உரிமைக்காக வாய்திறக்காமல் மத்திய அரசிடம் அமைதியாக உள்ளது மாநில அரசு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.