ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில், அரசியல் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் உட்பட 5 பேர் இன்று ஆஜர் ஆகியுள்ளனர்.
விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பினர் இன்று 3வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன் ராவ், மருத்துவர்கள் தினேஷ், முரளிதரன் உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.
8 பேரிடம் ஏற்கனவே குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 5 பேரிடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.
ஜெ.மரணம்: சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை!
சார்ந்த செய்திகள்
Next Story
''ஜெ.வையே மிரள வைத்தவர் பேராசிரியர் அன்பழகன்''-ஜவாஹிருல்லா பேச்சு
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் மு.ஹி.ஜவாஹிருல்லா பேசுகையில், ''இவர் தனது பெயருக்கு முன்னால் பேராசிரியர் பேராசிரியர் என்று போட்டுக் கொள்கிறார். ஆனால் ஆவணங்களைப் பார்க்கும் பொழுது இவர் உதவி பேராசிரியர்தான். அசிஸ்டன்ட் ப்ரொபஸர் தான் என்று ஜெயலலிதா பேசியுள்ளார். அப்பொழுது வீரமாக எழுந்து நின்ற பேராசிரியர் 'ஆம் உண்மைதான். நான் உதவி பேராசிரியர் தான். என்னுடைய கட்சிக்காரர்கள், என்னுடைய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என்னை பேராசிரியர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒன்றை நான் கேட்க விரும்புகின்றேன்.
இந்த சபையில் உறுப்பினராகி முதலமைச்சராக ஆகக் கூடிய அளவிற்கு இருக்கக்கூடியவர்கள் கடந்த காலம் செய்த தொழில்களை தங்களின் பெயர்களுக்கு முன்னால் போட்டுக் கொள்ள முடியுமா? அதைப் பற்றி நான் பேசினால் இந்த அரங்கம் தாங்குமா? என்று சொன்னார். ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக அவருடைய பங்களிப்பு மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. பேராசிரியர் கலைஞரைப் போன்று காலையிலேயே எழுந்தவுடன் பத்திரிகைகளை படித்து விடுவார். ஏறத்தாழ 8 நாளிதழ்களை படித்துவிட்டு குறிப்புகள் எல்லாம் எடுத்துக் கொண்டு பத்திரிகை செய்திகளில் வரலாற்றுப் பிழை எதுவும் இருந்தால் உடனடியாக குறிப்பிட்ட பத்திரிகையை அழைத்து நீங்கள் ஒரு வரலாற்று பிழை செய்திருக்கிறீர்கள் என்று சுட்டிக் காட்டுவார். கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் காலையிலேயே பத்திரிகைகளை படித்ததன் காரணமாக இருவரும் கருத்து பரிமாற்றத்தை செய்து மக்களுக்கு அற்புதமான செய்திகளை எடுத்துச் சொன்னார்கள்'' என்றார்.
Next Story
ஜெ.கெட் அப்பில் மீண்டும் கிருஷ்ணப்பிரியா! அதிமுகவில் பர பர!
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா. சசிகலா, இளவரசி போல போயஸ் தோட்டத்திலே இருந்த கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சசிகலா - இளவரசி சிறைக்கு சென்றதையடுத்தும் சென்னையில் தனது பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கிருஷ்ணப்பிரியா, தினகரனுக்கு எதிரான அரசியலை செய்து வருகிறார்.
அடிக்கடி பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவையும், இளவரசியையும் சந்தித்து விவாதிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கிருஷ்ணப்பிரியா தினகரனை தீயசக்தி என விமர்சனம் செய்து வரும் கிருஷ்ணப்பிரியா, ஜெ.மறைவையடுத்து அவரைப் போலவே சிகை அலங்காரம், உடை அலங்காரம் செய்துகொண்ட தனது புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவரது தோற்றம் அதிமுக அரசியலில் அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் கிருஷ்ணப்பிரியா, தற்போது மீண்டும் ஜெ.கெட் அப்பில் தோற்றமளிக்கும் புதிய படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். கிருஷ்ணப்பிரியாவின் இந்த தோற்றம் அதிமுகவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.