Skip to main content

தனிப்பட்ட முறையில் பேச ஒன்றும் இல்லை; நல்லபெயரை கெடுத்துக்கொண்டார் சுதீஷ் - துரைமுருகன்

Published on 07/03/2019 | Edited on 07/03/2019
dmk

 

தேமுதிக மாவட்ட செயலாளர் அனகை முருகேசனும், இளங்கோவனும் தங்கள் சொந்த வேலையாக திமுக பொருளாளர் அண்ணன் துரைமுருகனை சந்தித்தனர். ஆனால், பத்திரிகைகள் கூட்டணி விஷயமாக சந்தித்ததாக செய்தி வெளியிட்டிருக்கின்றன. உண்மை அதுவல்ல என்று தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் சுதீஷ் விளக்கமளித்துள்ள நிலையில்,

 

சுதீஷின் இந்த நிலைபாடு குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்தார்,

 

அனகை முருகேசனுடன் சொந்த விஷயமாக பேசுவதற்கு ஒன்றும் இல்லை.  அவரை எனக்கு முன்னபின்ன தெரியாது. ஏன் நீங்கள் தாமதமாக வந்தீர்கள் என கேட்டேன் அதற்கு மேலே உள்ளவர்கள் எல்லாம் அதிமுக கூட்டணிக்கு செல்ல நினைத்தார்கள் ஆனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாக திமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். தேமுதிகவை பற்றி பரிதாபப்படுவதை தவிர ஒன்றும் இல்லை. இப்போது சுதீஷ் இப்படி சொல்கிறார் என்றால் அவர்மீது வைத்திருந்த நற்பெயருக்கு அவரே குந்தகம் ஏற்படுத்துகிறார் என எண்ணத்தோன்றுகிறது எனக்கூறினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்