Skip to main content

டாஸ்மாக் கடைகளை திறப்பது பற்றி மறுபரிசீலனை தேவை - விஜயகாந்த்

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

 DMDK Vijayakanth about tamilnadu Tasmac open issue

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்