Published on 08/09/2020 | Edited on 08/09/2020
திண்டுக்கல் மாவட்டம், நாளை (09/09/2020) முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி என்று ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, "நாளை (09/09/2020) முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம்; உள் மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம். முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகின்றன" என்று கூறினார்.