Skip to main content

ஆய்வுக்குச் சென்ற இந்து அறநிலையத் துறையினர்! உச்சநீதிமன்ற தீர்ப்பைக் காட்டி மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள்!

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

Department of Hindu Charities who went for inspection! Dixit denies Supreme Court verdict

 

சிதம்பரம் நடராஜர் கோயில் சைவ தலங்களில் முதன்மை பெற்றது. இக்கோயிலில் உள்ள கனகசபையில் பக்தர்கள் ஏறிச் சாமி தரிசனம் செய்யப் பொது தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதனைக் கண்டித்து பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இதனை அடுத்து தமிழக அரசு கனகசபையில் ஏறிச் சாமி தரிசனம் செய்ய அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபையில் ஏறிச் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையினர் நடராசர் கோயிலில் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்கள் விபரம், அறக்கட்டளைகள் உள்ளிட்ட கட்டளைகள் விபரம் குறித்து ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் கோயிலில் ஆய்வு  செய்யப்படும் என்று கோயில் நிர்வாகத்திற்கு கடந்த மாதம் கடிதம் வழங்கினர். இதற்குத் தீட்சிதர்கள் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அறநிலையத்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பினர்.

 

இந்த நிலையில், திங்களன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடராஜர் கோவிலுக்கு வந்து தீட்சிதர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது அவர்கள் கருத்தைக் கேட்ட அமைச்சர், ஆய்வுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

Department of Hindu Charities who went for inspection! Dixit denies Supreme Court verdict

 

அதனைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை காலை (ஜூன்.7) சென்னை இந்து அறநிலையத்துறை வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் இணை ஆணையர்கள் (பழனி கோயில்) நடராஜன், வேலூர் லக்ஷ்மணன், கடலூர் அசோக்குமார், கடலூர் துணை ஆணையரும் ஒருங்கிணைப்பாளருமான ஜோதி, ஆடிட்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோயிலுக்கு ஆய்வு பணிக்காக வந்தனர். இவர்களைத் தீட்சிதர்கள் வரவேற்றனர். அவர்கள் அனைவரும் கனகசபையில் ஏறிச் சாமி தரிசனம் செய்தனர். .


பின்னர் தீட்சிதர்கள் தரப்பில் ஒரு மனுவை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் அளித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு இந்தக் கோயிலுக்கு ஏற்றது இல்லை. சுமார்  2 ஆயிரம் ஆண்டுகளாகத் தீட்சிதர்களின் மூதாதையர் கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்து நிர்வகித்து வருகின்றனர் என்று கூறி கணக்கு காட்ட மறுத்தனர். 


இதனையடுத்து அதிகாரிகள் குழுவினர் தீர்ப்பில் அப்படி இல்லையென்று எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் அதிகாரிகள் அவர்கள் அளித்த கடிதத்தை வாங்கிக்கொண்டு கோயில் வளாகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து  ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்து அறநிலையத்துறை அதிகாரி குழுவினர் சிதம்பரத்தில் தங்கி உயரதிகாரிகள் ஆலோசனைகளைப் பெற்று (ஜூன்.8) மீண்டும் கோயிலுக்கு ஆய்வுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.


கோயில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வி.வி சாமிநாதன் கடிதம் ஒன்று அளித்துள்ளார். அதில் சிதம்பரம் கோயிலுக்குக் கடந்த 2002-ஆம் ஆண்டு 8 கிராமில் தங்க வில்வ மாலை அளித்துள்ளதாகவும், அந்த மாலை உள்ளதா? எனப் பார்ப்பதற்கு தீட்சிதர்கள் காட்ட மறுக்கிறார்கள் எனவும், தங்க மாலையை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 


சிதம்பரம் கோயில் சொத்து விபரங்கள் குறித்து ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுக்குக் கோயில் தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

‘சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்க’ - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Nataraja Temple administration to submit income and expenditure account  orders High Court

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அறநிலையத்துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.