Skip to main content

ஆர்.எஸ்.எஸ், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

Denial of permission for RSS, Vck rally

 

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணிகளை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அனுமதி கோரப்பட்ட நிலையில், திருச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதநல்லிணக்க பேரணி என விசிக சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் விசிகவின் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்