Skip to main content

கேபிள் டிவி ஒயர்களில் தொங்கும் பாட்டல்களில் டெங்கு கொசு அபாயம்

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
c

 

கடலூர் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால்  பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் தினம் தினம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் மற்றும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் 2600-க்கும் மேற்பட்டவர்கள் வெளியுற நோயாளிகளாக தினந்தோறும் சிகிச்சை பெற்று 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாக உள்ளனர். இதேபோல் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர், புவனகிரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் மாவட்டத்தில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதை உறுதிபடுத்தி அவர்களுக்கு கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட முழுவதும் நடத்தபடுகிறது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகம், வீடுகளுக்கு சென்று டெங்கு கொசு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். சரியான பராமரிப்பு இல்லாத இடங்களில் அபராத தொகையையும் வசூலித்து வருகிறார்கள்.

 

இதனிடையே டெங்கு கொசு உற்பத்தி செய்யும் இடத்தை விட்டு விட்டு இல்லாத இடத்தில் டெங்குவை ஆய்வு செய்வதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. டெங்கு கொசு சுத்தமான தண்ணீரில் தான் முட்டையிடும் என்று கூறும் அதிகாரிகள். மாவட்டம் முழுவதும் கேபிள் டிவிக்கு ஒயர்கள் இழுக்கப்பட்டுள்ளது. இதில் இரு ஒயர்களின் இணைப்பில்  ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தொங்கவிட்டுள்ளனர். தொங்கவிட்டதோடு சரி அவர்கள்  இதனை சரியாக பராமரிப்பது கிடையாது. இதில் மழை நேரத்தில் மழைநீர் பாட்டிலுக்குள் சென்று அப்படியே நின்று விடுகிறது. சுத்தமான தண்ணீர் என்பதால் கொசுக்கள் உள்ளே சென்று டெங்கு கொசுவை அதிகம் உற்பத்தி செய்கிறது. எனவே டெங்குவை கண்காணிக்கும் அதிகாரிகள் கேபிள் டிவி ஒயர்களில் தொங்கும் பாட்டில்களை முதலில் ஆய்வு செய்யுங்கள்., பராமரிப்பு செய்தோ கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Dr Arunachalam - Health care - dengue fever

 

மழைக்காலங்களில் பெருகி வரும் டெங்கு காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது. அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு...

 

பருவகால மாற்றத்தால் பருவ மழை சீக்கிரமாகவே வந்து விட்டது. இதை எதிர் பார்க்காமலேயே நாம் முன்னரே மழை நீர் வடிகாலுக்கான குழிகளைத் தோண்டிப் போட்டிருந்தோம். அது பெரிய சாலைகளிலும், தெருப்புற உட்சாலைகளிலும் மூடப்படாமலே இருந்து கொண்டு தான் இருக்கிறது. 

 

இப்படி மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கிற நீரில் கொசு முட்டைகள் அதிக அளவில் உற்பத்தியாகி அவை டெங்கு காய்ச்சல் நோக்கி இழுத்துச் செல்கிறது. அது போக நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்த பிறகு மாநகராட்சி தரப்பிலிருந்து விழிப்புணர்வை ஆரம்பித்தார்கள். ஆனால் அது பெரிய அளவில் போய்ச்சேரவில்லையோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

 

இரவில் மட்டுமே கடித்துக் கொண்டிருந்த கொசு, அதிகமாக பெருகி இப்போதெல்லாம் பகலிலேயே கடிக்கிறது. அதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் சுற்றி இருக்கிற பழைய பொருட்களில் நீர் எதுவும் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கிய பொருட்களில் பிளீச்சிங்க் பவுடரை தெளித்து கொசு பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் கொசு வலைகளை வைத்து கொசு நுழைவை தடுக்க வேண்டும். இதுவே டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளாகும்.

 

 


 

Next Story

சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு; இந்திய அணியை பாதிக்குமா?

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dengue for Subman Kill! Will it affect the Indian team?

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 நடந்து வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை விளையாட ஓரிரு நாட்களே உள்ளது. இந்தநிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாசிடிவானது, அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துமா?

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

 

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி வருகிற ஞாயிறு, சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க, சமீபத்தில் தான் இருதரப்பு வீரர்களும் சென்னை வந்திறங்கி பயிற்சி செய்து வருகின்றனர். இந்தியா தனது முதல் ஆட்டத்தை விளையாட இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்தநிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாசிடிவானது, அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. கில்லின் உடல்நிலை சரியாக 7 நாட்கள் வரை ஆகும் என்பதால், அவர் முதல் இரண்டு ஆட்டங்களையும் தவறவிட நேரிடும் எனவும் தெரிகிறது. சமீபத்தில் தான், ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியை இந்தியா துவம்சம் செய்தது.

 

அந்த ஆட்டங்களில் கில்லுக்கு பெரும் பங்கு இருந்தது. மேலும், அவரின் ஆட்டம் இந்திய அணிக்கு ஓப்பனிங்கில் பெரும் பலமாகவும் இருக்கும். அதிலும், தற்போது ரோகித் வேறு செம ஃபார்மில் இருக்கிறார். இந்த நிலையில், கில் இல்லாதது இருவரின் கூட்டணியையும் சிதைத்து புதிய வீரர் விளையாட நேரிடும். இதற்கு மத்தியில் பிசிசிஐ, இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் சுப்மன் கில்லை விளையாட வைக்கவேண்டும் என முனைப்புடன் இருக்கிறது. இதேபோன்ற பிரச்சனை தான் 2019ல் இந்திய அணி எதிர்கொண்டது. அப்போது, ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இவரைத் தொடர்ந்து விஜய் ஷங்கருக்கும் காலில் காயம் ஏற்பட இந்திய அணி சற்றுத் தடுமாறியது. 

 

சுப்மன் கில் ஓப்பனிங்கில் இறங்கவில்லை என்றால், யார் விளையாடுவார்கள்? இவரின் இடத்தை இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷான் நிரப்புவார் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு தொடக்கத்தில் வலது-இடது பேட்ஸ்மேன்களின் கூட்டணி கிடைப்பது பலம் தான் என்றாலும், கில் இல்லாமல் இந்திய அணியால் ரன்களை குவித்துவிட முடியுமா? விராத் கோலி பழைய ஃபார்மிற்கு திரும்பி நம்பிக்கை அளிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.