


Published on 25/04/2022 | Edited on 25/04/2022
தமிழ்நாடு காங்கிரஸின் மீனவர் அணியின் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், மீனவர் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின் தலைமையில் இந்தப் போராட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.