ஜனநாயக மாதர்சங்க சிறப்புப் பேரவை (படங்கள்)
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஒன்றியக்குழு நிர்வாகிகளுக்கான சிறப்புப் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் டி. சலோமி தலைமை வகித்தார். ‘பெண்களும் மூட நம்பிக்கைகளும்’ என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துநிலவன், ‘மாதர் சங்கத்தின் செயல்பாடுகள்’ என்ற தலைப்பில் மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக மாவட்டத் தலைவர் பி. சுசீலா வரவேற்க, பொருளாளர் எஸ். பாண்டிச்செல்வி நன்றி கூறினார். துணைத் தலைவர் எம். பவானி, துணைச் செயலாளர் சுமதி மற்றும் சங்கத்தின் ஒன்றியக்குழு நிர்வாகிகள் பங்கேற்றன.
-இரா. பகத்சிங்