Skip to main content

'அதிமுகவிற்கு சரிவே கிடையாது'-எடப்பாடி பழனிசாமி பேட்டி   

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
'The decline of the ADMK   No'-Edappadi Palaniswami interview

அதிமுகவிற்கு சரிவே கிடையாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கு  பிரதமர் பலமுறை தமிழகத்திற்கு வந்து கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பாஜகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள். கோவையில் கூட பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தினார், அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். இப்படி அவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கின்ற அமைச்சர்களலெல்லாம் இங்கே தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். ஆனால் அதிமுகவில் எங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எங்களுக்காக பிரச்சாரம் செய்தார். எங்கள் கூட்டணியில் இருந்த சில கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் ஒரு சில தொகுதிகளில் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய முடிந்தது. அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆங்காங்கே அந்தந்த இரண்டு மூன்று மாவட்டங்களில் அங்குள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய முடிந்தது.

திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காக திமுக அமைச்சர்கள் பல இடங்களில் முகாமிட்டிருந்தார்கள். இதனால் எங்களுடைய மூத்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் வேறு நாடாளுமன்றத் தொகுதியில் சென்று பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் இத்தனைக்கும் இடையில் தான் அதிமுக ஒரு சில வாக்குகள் கூடுதலாக பெற்று வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதோடு இது நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் அல்ல. 2014-ல் இதே கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக மூன்றாவது இடத்திற்கு தான் வந்தது. அதிமுக வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த வாக்குகள் பெற்றது சி.பி.இராதாகிருஷ்ணன். அவர் அதிமுக வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தான் தோல்வி அடைந்தார். ஆனால் திமுக 2 லட்சத்து 17,000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே அதிமுகவிற்கு சரிவே கிடையாது'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; 5 தனிப்படைகள் அமைப்பு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Absentee MR Vijayabaskar; 5 personnel system

தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

Next Story

'அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கும் முயற்சியே திமுகவிற்கு கிடையாது' - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
'DMK has no attempt to think about the next generation' - Premalatha Vijayakanth's speech

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்குப் பின்பு பேச அனுமதி தருகிறேன் எனச் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகச் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''காலையில் எழுந்தவுடன் குடிப்பவர்களைக் குடிகாரன் என்று சொல்லக்கூடாது என ஒரு புதிய விளக்கத்தை அமைச்சர் ஒருவர் சொல்கிறார். காலையில் எழுந்தவுடன் குடிப்பவர்களைக் குடிகாரன் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வார்கள். அமைச்சர் முத்துசாமி அவர்களே உங்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், தன்மானம் இருந்தால் இந்த 63 பேர் மரணத்திற்கும் நீங்கள் முழுமையாக பொறுப்பேற்று உங்களுடைய மந்திரி பதிவையே ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் மக்களுக்கு செய்யும் நியாயமான செயலாக இருக்கும். இதை சிபிஐ வழக்காக மாற்ற வேண்டும். 40க்கு 40 நாங்கள் ஜெயித்து விட்டோம் அதனால் தான் பொறாமையில் செய்கிறார்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார். 40க்கு 40 ஜெயிச்சு என்ன செய்யப் போறீங்க கேண்டினுக்குத்தான் போகப் போறீங்க. கேண்டினில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரபோறீங்க. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து 200க்கு 200, விக்கிரவாண்டி தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட எல்லோரையும் டெபாசிட் இழக்க வைப்பது. இதுதான் இவர்கள் யோசனை. திமுகவிற்கு அடுத்த தலைமுறைகளைப் பற்றி யோசிக்கும் முயற்சியே கிடையாது. அடுத்த தேர்தலை நோக்கித்தான் இவர்கள் ஆட்சி செய்கிறார்களே ஒழிய, இவர்கள் அடுத்த தலைமுறைக்கு எதையும் விட்டுவிட்டு போவதாக இல்லை'' என்றார்.

படம்:எஸ்.பி.சுந்தர்