Skip to main content

“அரசு எடுக்கும் முடிவுகள் எங்களை பாதிக்காதபடி இருக்க வேண்டும்” - அமைச்சரிடம் மனு அளித்த பட்டர்கள்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

The decisions taken by the government should not affect us

 

தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் அறிவிப்பால் எங்களுடைய மந்திரம் ஓதும் பணி பாதிக்கப்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேருவிடம் பட்டர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, உறையூர், அன்பில் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பட்டர்கள் நேற்று (12.09.2021) அமைச்சர் கே.என். நேருவிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

 

அதில், “ஆண்டாண்டு காலமாக நாங்கள் கோவில்களில் மந்திரம் ஓதும் திருப்பணியை மேற்கொண்டுவருகிறோம். தற்போது புதிதாக அமைந்திருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. எனவே அந்த அறிவிப்பின் மூலம் எங்களுடைய பணிகள் ஒருபோதும் பாதிக்காதபடி அரசின் செயல்பாடுகள் இருக்க கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

மேலும், “முழுநேரப் பணியாக கடவுளுக்கு மந்திரம் ஓதும் திருப்பணி செய்வதை மட்டுமே வழக்கமாகக்கொண்டிருக்கும் எங்களுக்கு அரசின் எந்த உதவியும் சம்பளமும் கிடையாது. கடவுளின் திருப்பணிக்காக மட்டுமே நாங்கள் உழைக்கிறோம். எனவே அரசு எந்த முடிவை எடுத்தாலும், எங்களுடைய பணி பாதிக்காதபடி அந்த முடிவுகள் இருக்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.