கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புகள் மூலம் மொத்தம் 36 பேர் இறந்துள்ளதாக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக கஜா புயல் தீவிரமடைந்து நேற்று முழுமையாக கரையை கடந்தது. இந்த புயல் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த புயல் பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 பேர் இறந்துள்ளதாக பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கஜா புயல் பாதித்த 10 மாவட்டங்களில் 1,27,448 மரங்கள் விழுந்துள்ளதாகவும் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.