Skip to main content

பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1-ம் தேதியில் இருந்து "குட் பை"

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

28 ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் பைகளோ அதன் பயன்பாடுகளையோ பற்றி அவ்வளவு அறிந்திருக்காத காலம். அப்போதெல்லாம் ரேசன் கடைகளானாலும் சாி, பெட்டி கடைகளானாலும் சாி துணி பை அல்லது பழைய பேப்பா்களில் தான் பொருட்களை வாங்கி வந்தனா். துணிக்கடைகளில் கூட துணிப்பைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

 

         

plastic

 

அதன்பிறகு தான் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தியும் பயன்பாடுகளும் தலை காட்ட தொடங்கியது. தொடா்ந்து எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் என்ற நிலை உருவானது. கடைகளில் எல்லாம் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கபபட்ட பொருட்களாகவே மாறியது. துடைப்பதில் இருந்து சாப்பாடு சாப்பிடுவது கூட பிளாஸ்டிக்கில்  மாறியது. இதனால் பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்பவா்கள் கூட  பை எதுவும் எடுத்து செல்லாமல் கைவீசி தான் சென்றனா். அதே போல் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடிய ஃபைல்கள் கூட பிளாஸ்டிக்கா மாறியது. 

 

plastic

              

இப்படி மக்கள் பயன்பாட்டோடு ஒன்றியிருந்த பிளாஸ்டிக்கை மக்கள் பயன்படுத்தி விட்டு அதை நிலத்தில் கண்ட கண்ட இடங்களில் தூக்கி எறியும் போது அந்த பிளாஸ்டிக் மக்கி மண்ணோடு மண்ணாகாமல் உயிா் பெற்று கிடக்கிறது. இது சுற்றுபுறச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியது. நிலத்தடி நீருக்கு எமனாக மாறியதோடு மழைநீரை தாங்கி பிடித்து மண்ணோடு மண் கலப்பதை தடுக்கிறது. இந்த பிளாஸ்டிக் உள்ளூா் மட்டுமல்ல உலகம் முமுவதும் அச்சுறுத்தலை உண்டாக்கியது.

 

             

இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற ஜனவாி 1-ம் தேதி புத்தாண்டு நாளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அரசு அறிவித்து அதற்கான அறிவிப்பணையையும் வெளியிட்டது. அதன்படி பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடமிருந்து விடை பெறுவதற்கு இன்னும் சில நாட்களே தான் உள்ளன. இதற்கு பொது மக்களும் பிளாஸ்டிக் உற்பத்தியாளா்களும் முமு ஒத்துழைப்பு தரும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் இதற்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் கடும் எதிா்ப்பு தொிவித்துள்ளனா். 

 

plastic

              

இதில் தற்போது மக்கும் பிளாஸ்டிக்கில் வரும் பால், தயிா், எண்ணெய் பொருட்கள், மருத்துவ பொருட்கள் பயன்பாட்டில் இருக்கும் அதே வேளையில் மக்காத பிளாஸ்டிக் முமுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு துறைகளில் கூட சணல் கொண்டு தயாாிக்கப்பட்ட ஃபைல்கள் தான் 1-ம் தேதியில் இருந்து புழக்கத்திற்கு வருகிறது. 

              

இதனால் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம் "குட்பை" சொல்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

40 டன் பிளாஸ்டிக் பறிமுதல் - வியாபாரிகளுக்கிடையே தகராறு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
30 thousand tons of plastic seized in Tiruvannamalai

திருவண்ணாமலை நகரில் சிவன்படவீதி என்கிற கருவாட்டுக்கடை தெருவில் பிளாஸ்டிக் மொத்தமாக விற்பனை செய்யும் குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். வெளியே பார்க்க கடைபோல் இருந்தது, உள்ளே சென்றால் குறைந்த பட்ச காற்று வசதி கூட இல்லாமல் பாதாள குகைக்குள் போவதுபோல் சுத்தி சுத்தி போய்க்கொண்டே இருந்தது. உள்ளே பரந்துவிரிந்த குடோனில் பயன்படுத்தக்கூடாத வகையை சேர்ந்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் உரிமையாளர் என வந்தவர் கலெக்டரிடம், நான் ஜீ.எஸ்.டி கட்டிட்டு தான் இந்த பொருளை வாங்குறேன், அது எப்படி குற்றமாகும், இதை எதுக்கு பறிமுதல் செய்யறிங்க? என கேள்வி எழுப்பினாரர். நீங்க இந்த பொருளை எங்கயிருந்து வாங்கறிங்க? சேலத்தில் இருந்து என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நீங்க இந்த பிளாஸ்டிக் வாங்கும் இடத்தின் முகவரியை சொல்லுங்க என்று கேட்டனர். அதற்கு, “தெரியாது, போன் செய்வேன் சரக்கு அனுப்புவாங்க சார்” என பல்டியத்தார். அட்ரஸ் தெரியாம எப்படி பொருள் வாங்கறீங்க? பணம் தர்றீங்க? ஜி.எஸ்.டி கட்டறதா சொல்றீங்க எனக்கேட்க பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்.

30 thousand tons of plastic seized in Tiruvannamalai

நகராட்சி ஊழியர்களை வைத்து உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பிக்கொண்டே இருக்க, வந்துகொண்டே இருந்தது. அந்த ஒரு குடோனில் இருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் 40 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெகிழி என்கிற பிளாஸ்டிக் பறிமுதல் செய்யச்சென்ற கடைகள் மற்றும் குடோன்களில் காலாவதியான, பயன்படுத்த தகுதியற்ற உணவு பொருட்களான டொமோட்டா சாஸ், பாதாம், முந்திரி பாக்கெட்டுகள், திண்பண்ட பொருட்களும் இருந்தன. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை வரவைத்து ஆய்வு செய்யச்சொன்னார் கலெக்டர். “நாங்க விற்கிறோம் மளிகை கடை, ஹோட்டல்காரங்க வந்து வாங்கிக்கிட்டு போறாங்க, அங்கயெல்லாம் ஏன் ரெய்டு போகல..” என வடநாட்டை சேர்ந்த அந்த முதலாளி கேட்க, அங்கிருந்த மற்ற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் வியாபாரிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

படங்கள் - எம்.ஆர். விவேகானந்தன்

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.