Skip to main content

கத்தி முனையில் பணம் பறிப்பு; ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

Culprit arrested under goondas

 

சேலம் முகமதுபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஷாஹூல். இவரிடம் சேலம் சின்னக்கடை வீதியைச் சேர்ந்த ரத்தினசபாபதி மகன் ஆனந்தராஜா (43) கடந்த பிப்ரவரி 22ம் தேதி மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த அலைபேசி, சட்டைப்பையில் இருந்த 1200 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

 

இதுகுறித்து ஷாஹூல் அளித்த புகாரின் பேரில் சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் ஆனந்தராஜாவை சம்பவத்தன்றே கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஆனந்தராஜா மீது ஏற்கனவே பரோட்டா மாஸ்டர் ஒருவரை கட்டையால் தாக்கிய வழக்கும் உள்ளது.

 

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் லாவண்யா, மாநகர ஆணையர் விஜயகுமாரிக்கு பரிந்துரைத்தார்.

 

இதையடுத்து ஆணையர் விஜயகுமாரியின் உத்தரவின் பேரில் ரவுடி ஆனந்தராஜாவை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் குண்டர் சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்