Skip to main content

அஸ்வினோடு கிரிக்கெட் ஆடிய அமைச்சர் உதயநிதி; மாணவர்களுக்கு புதிய திட்டம்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (மாந்தோப்பு பள்ளி) சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சியினை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

 

இந்நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சியை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஸ்வின் வீசிய பந்தை பேட்டிங் செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்