Skip to main content

சாலையில் சுற்றித்திரிந்த மாடு மோதி விபத்து; கல்லூரி மாணவி காயம்

Published on 23/10/2024 | Edited on 23/10/2024
 A cow roaming on the road collided with an accident; College girl injured

நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதியதில் மாணவி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் திருமால் நகர் பகுதியைச் சேர்ந்த சுவாதி என்ற கல்லூரி மாணவி வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது தியாகராஜர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது தியாகராஜர் நகர் 2வது தெரு வழியாகச் சென்றபோது சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடீரென குறுக்காக பாய்ந்தது. இதில் மாணவி சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தார். இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்பு கோரிக்கை வைத்து வரும் நிலையில் மாணவி ஒருவர் மாடு மோதி விபத்தில் சிக்கிக் காயமடைந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது மாணவி மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்