Skip to main content

ஊழல் மகாராணி ஜெயலலிதாவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் ஒன்றா..? கடம்பூர் ராஜூவுக்கு தி.மு.க. இளைஞர் அணி எச்சரிக்கை..!!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

 
தி.மு.க.விலுள்ள கடைசித் தொண்டனின் கால்செருப்புக்கு சமம்.!  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், ஊழல் மகாராணி ஜெயலலிதாவையும் ஒன்றாக ஒப்பிடுவது சரித்திரப்பிழை என்பதை மங்குனி அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டும் என தி.மு.க. மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் தனது அறிக்கையில் எச்சரிக்க, தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

 

 

dmk

 

அவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து.,   " தமிழகத்தில் ஐந்துமுறை முதல்-அமைச்சராக இருந்து பேரறிஞர் அண்ணாவின் வழியில், பொற்கால ஆட்சி தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னை தந்து, உழைத்த உத்தம தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்கள் வயது முதிர்வால் மரணம் அடைந்த பிறகு அவரது உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு எங்கள் தலைவரும், கலைஞர் அவர்களின் தவப்புதல்வருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தகுதி பார்க்காமல் நேரில் போய் சந்தித்து வேண்டுகோள் வைத்தார்.

 

முதுகெலும்பு இல்லாத மோடியின் அடிப்பொடியான தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த வேண்டுகோளை நிராகரித்த காரணத்தினால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடினோம். ''மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கலைஞருக்கு மெரீனா கடற்கரையில் இடம் வழங்கவேண்டும்'' என்று இந்த அரசின் கன்னத்தில் அறைந்தார் போன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு மெரீனா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் சமாதி அருகில், மறைந்த எங்கள் மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களது உடல், அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் என்ற முறையில்  முறைப்படி முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கும், அரசு மரியாதை செய்வதற்கும் முழுத்தகுதி உடையவர் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நாடே அறியும். மறைந்த  உங்கள் தலைவி ''ஊழல் ராணி'' ஜெயலலிதா போன்று உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி இல்லை எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் என்று உலக நாடுகளே போற்றிய உத்தம தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் வழங்கப்பட்ட இடம் இந்த அரசு போட்ட பிச்சை என்றால், ஊழல் மகாராணி என்று உலகமே அறிந்த ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இடம் எந்த வகையில் போடப்பட்ட பிச்சை என்பதை அமைச்சர் கட்டிங் ராஜூ அவர்கள் தான் விளக்கவேண்டும்.

 

''செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நக்குகிற நாயைப்போல முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், ஊழல் மகாராணி ஜெயலலிதாவையும் ஒன்றாக ஒப்பிடுவது சரித்திரப்பிழை என்பதை மங்குனி அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டும். உலக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் வன்மமாகவும், வக்கிரமாகவும் இருந்த இந்த மானம் கெட்ட ஊழல் அரசை கண்டித்து உணர்த்தும் வகையில் கழகத்தலைவர் மாண்புமிகு., தளபதியாரின் பெரும் முயற்சியால் உயர் நீதிமன்றம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் வழங்கி உத்தரவிட்டது.

 

 

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கேற்ப மக்களுக்காவே பணியாற்றிய தலைவர் கலைஞர் அவர்களின் உழைப்பு, தியாகம், பொறுப்புணர்வு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் நிறைவேற்றிய திட்டங்கள் இவற்றையெல்லாம் அறிந்து உயர் நீதிமன்றம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரீனாவில் இடம் கொடுக்க உத்தரவு வழங்கியதை இந்த நாடே அறியும்.

 

 

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியை பறித்து, கூவத்தூரில் கூத்தடித்து, சசிகலாவின் காலை நக்கி, கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த அறிவுகெட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு எழுப்பிய தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டார் எங்கள் தலைவர் மாண்புமிகு., தளபதி அவர்கள். இதனை அமைச்சர் கமிஷன் ராஜூ அவர்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.