Skip to main content

பாதிப்பு 3,446; டிஸ்சார்ஜ் 1,834 - கரோனா இன்றைய அப்டேட்!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

gh



தமிழகத்தில் இன்று 3,446 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,290 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 1,000-க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 8,96,780 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,834 ஆக உள்ளது.

 

இதன்மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,63,611 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,764 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 82,193 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 1,98,49,248 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்