Skip to main content

முழு ஊரடங்கு; வெறிச்சோடிய கோயம்பேடு, பசியால் வாடும் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள்..! (படங்கள்)

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தீவிர பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மே 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 24ஆம் தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பலதரப்பட்ட மக்களும் கடுமையான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனர். நடுத்தர மக்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற மக்கள் மற்றும் சாலையோர மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையைச் சுமுகமாக நடத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

அவ்வாறு இருப்பவர்களுக்குத் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் உணவளித்து வருகின்றனர். மேலும், பலர் சாலையோர வசிக்கும் மக்களுக்கு தங்களால் முடிந்தவற்றைக் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். சிலர் உணவு, தண்ணீர் பாட்டில், முக கவசம் ஆகியவற்றைத் தேவை உள்ளவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று கொடுத்து உதவுகின்றனர். முழு ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் தடைசெய்யப்பட்டதால் மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் சிலர் வேலையின்றியும் உண்ண உணவின்றியும் சாலைகளில் அமர்ந்திருந்தது காண்போரை வருந்தச்செய்வதாக இருந்தது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.