Skip to main content

எச்சில் துப்பிய 12 பேருக்கு தலா ஐநூறு...! -ஈரோட்டில் ஃபைன் பரபரப்பு!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

erode

 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகர்ப் பகுதியில்தான் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்புகளில் 60 சதவீதம் பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் தான். இதனால் மாவட்ட நிர்வாகம் ஈரோடு மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நிலையை எடுத்து வருகிறது. மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

முதலில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும், அதைத் தொடர்ந்து இரண்டாம் முறை வருபவர்களுக்கு 200 ரூபாயும், மூன்றாவது முறையும் முகக் கவசம் இல்லாமல் தென்பட்டால், 'கைது' நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் முகக் கவசம் அணியாமல் செல்கிறார்கள். இதனால் இப்போது அபராதம் இருநூறு ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல் கடைகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், அந்த கடைக்காரருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
 

மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமே அபராதம் வசூலித்து வந்த நிலையில் இப்போது மாநகராட்சி பணியாளர்களுடன் சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் அபராதம் விதித்து வருகின்றனர்.

 

Ad

 

இந்த நிலையில் ஈரோட்டில் 17 ஆம் தேதி பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 4 நபர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் முதன்முறையாக விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்றும் பேருந்து நிலையம், வ.உ.சி.காய்கறி மார்க்கெட், நாச்சியப்பா வீதி உட்பட சில இடங்களில், சாலையில் எச்சில் துப்பிய மேலும் 8 பேருக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறாக 12 நபர்களுக்கு 500 அபராதம் விதிக்கப்பட்டது. எச்சில் துப்பியதற்காக ஐநூறு ரூபாயா? என ஃபைன் கட்டியவர்கள் மிரண்டு போன பரபரப்பு சம்பவங்களும் ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.