Skip to main content

ஒரே தெருவில் 19 பேருக்கு கரோனா! சீல் வைத்த மாநகராட்சி! 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Corona for 19 people on the same street!  Corporation Sealed!

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் என்பது சுனாமி போல் விசுவரூபம் எடுத்து பரவும் என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பறக்கை செட்டித்தெருவில் வரிசையாக 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என 300-க்கும் மேற்பட்டவா்கள் வசிக்கின்றனர். அங்கு ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மற்றவர்களுக்கும் சளி பரிசோதனை செய்ததில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த தெருவை வலை போட்டு யாரும் உள்ளேயும் வெளியேயும் போக முடியாத  படி அடைத்துள்ளனர். அங்கிருந்த ரேஷன் கடையும் 10-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூஜை செய்ய பூசாரி மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து நம்மிடம் பேசிய மாநகர் நல அலுவலர் விஜய்சந்திரன், “3 பேருக்கு மேல் ஒரு பகுதியில் தொற்று அதிகமாக இருந்தால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்க வேண்டும். இங்கு 19 பேருக்கு தொற்று இருப்பதால் அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த தெரு மக்கள், ரேஷன் கடை ஊழியர்கள், அங்கு வந்து சென்றவர்கள் என 156 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 3வது அலையில் தனிமைபடுத்தப்பட்டு சீல் வைக்கபட்ட முதல் பகுதி இது தான். அங்கு உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க மாநகராட்சியால் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார். 

 

Corona for 19 people on the same street!  Corporation Sealed!

 

இதே போல் மாநகராட்சியின் பூங்காவில் ஒரு பகுதி வாடகை வாகனம் நிறுத்துமிடமாக உள்ளது. இதனால் பூங்காவுக்கு வருபவர்களும் வெளி நபர்களும் அங்கு தான் வாகனங்களை நிறுத்துவார்கள். இந்த நிலையில் அங்கு வந்த இருவருக்கு சளி பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று உறுதியானதால் பூங்காவும் அடைத்து சீல் வைக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.