Skip to main content

கோர்ட் நடவடிக்கையை நிறுத்தக்கோரி கொடைக்கானலில் முழு கடையடைப்பு!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலமான கோடை இளவரசியை காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோடைக்கு வந்து கோடை இளவரசியை இயற்கையை ரசித்து பார்த்துவிட்டு போய் வருவது வழக்கம். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கொடைக்கானல் மற்றும் கீழ்மலை,மேல்மலை மலைப்பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள்,வணிகவளாகம், வீடுகள் என இருந்து வருகிறது. இப்படி இருக்கக் கூடிய கட்டடங்களில் பெரும்பாலான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கிறது.

      

  Complete Bandh in Kodaikanal!!

 

இப்படி விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து விதிமுறைகளை மீறிய கட்டிய 45 கட்டடங்களுக்கு சீல் வைத்து ஜனவரி 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இருந்த 45 கட்டடங்களுக்கு மின் இணைப்பை துண்டித்து அந்த கட்டடங்களுக்கு சீல் வைத்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

 

அதன் பின் மீண்டும் மதுரை ஐகோர்ட் கிளை கொடைக்கானலில் 1471 கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இருக்கிறது அந்தக் கட்டடங்களையும் ஆய்வு செய்து அந்த கட்டடங்களுக்கு சீல் வைத்து அதன் அறிக்கையை வருகிற மார்ச் 16ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

  Complete Bandh in Kodaikanal!!

 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோடையிலுள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் சர்வ கட்சியுடன் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். கோர்ட் உத்தரவை நிறுத்தி எங்களுக்கு கருணை அடிப்படையில் கால அவகாசம் கொடுங்கள் அதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. அதுபோல் 25 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் ப்ளானை நிறைவேற்றி கொடுங்கள் என புகார் மனு கொடுத்திருந்தனர். அப்படி இருந்தும் கோடை நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறிய  கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்க தயாராகி வந்தனர். இந்த விஷயம் கோடை மக்களுக்கு தெரிந்ததின்  பேரில்தான் திடீரென கோடையில் வசிக்கக்கூடிய லாட்ஜ் உரிமையாளர்களும், வணிகப் பெருமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என ஒட்டுமொத்த கோடையில் உள்ள மக்களும் நகரில் தங்கும் விடுதிகளையும், உணவகங்களையும், கடைகளையும் ஒட்டு மொத்தமாக இழுத்து மூடி கடையடைப்பு போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

 

  Complete Bandh in Kodaikanal!!

 

இதன் இதன் மூலம் சுற்றுலா பயணிகளும் கோடைக்கு வரத்து குறைந்தது. இந்த கடையடைப்பு போராட்டம் மூலம் கோர்ட் விதித்துள்ள உத்தரவை நிறுத்தி கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கோடையில் உள்ள மக்களும், சர்வகட்சியினரும்  குரல் கொடுத்து வருகிறார்கள். இதை மீறி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கினால் தொடர் போராட்டங்களில் இறங்கவும் தயாராகி வருகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.