Skip to main content

ஊராட்சி ஒன்றிய பணிகளில் தி.மு.க குறுக்கிடுவதாகப் புகார்! அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

vComplaint that DMK is interfering in the work of the Panchayat Union! ADMK councilors petition district collector

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.க.வினர் குறுக்கீடுகள் செய்வதாகவும், அ.தி.மு.க மற்றும் பிற கட்சி கவுன்சிலர்களை தி.மு.க.வில் சேருமாறு வற்புறுத்துவதாகவும்  கூறி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

 

அ.தி.மு.க. புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்பிரமணியத்திடம்  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், அண்ணாகிராமம் ஒன்றிய குழு தலைவர் வி.ஜானகிராமன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ், குமராட்சி ஒன்றிய குழு தலைவர் பூங்குழலி பாண்டியன், துணைத்தலைவர் ஹேமலதா, நல்லூர் ஒன்றிய குழு தலைவர் செல்வி ஆடியபாதம், துணைத் தலைவர் ஜான்சிமேரி, புவனகிரி ஒன்றிய குழு தலைவர் சி.என்.சிவபிரகாசம், துணைத்தலைவர் வ.வாசுதேவன், கீரப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், துணைத் தலைவர் காஷ்மீர் செல்வி, கம்மாபுரம் ஒன்றியக்குழு தலைவர் மேனகா விஜயகுமார், துணைத் தலைவர் முனுசாமி, ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகஜீவன்ராம்,  பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் மோகன சுந்தரம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

 

அந்த புகார் மனுவில், "தி.மு.க ஆளுங்கட்சியாக வந்தவுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அத்துமீறி அதிகாரம் செலுத்தி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டி வருகின்றனர். வளர்ச்சிப் பணிகளிலும் குறுக்கீடு செய்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய தீர்மானங்கள், ஒப்பந்தங்கள் மூலமாக விடப்பட்ட பணிகளிலும் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டுகின்றனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. மற்றும் பிற கட்சி கவுன்சிலர்களை தி.மு.க.வில் சேருமாறு மிரட்டுகின்றனர்.

 

Complaint that DMK is interfering in the work of the Panchayat Union! ADMK councilors petition district collector

 

விருதாச்சலம் ஒன்றிய குழு தலைவர் மீது கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதியும், நல்லூர் ஒன்றிய குழு தலைவர் மீது கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி விருதாச்சலம் கோட்டாட்சியரிடம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர். அதில் நல்லூர் ஒன்றியக் குழு தலைவருக்கு எதிராக வழங்கப்பட்ட மனுவில் அ.தி.மு.க கவுன்சிலர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, கடிதம் போலியாக வழங்கப்பட்டதாக உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் நல்லூர் ஒன்றிய குழு கூட்டத்தை வரும் 20ஆம் தேதி கூட்டுவதாக கோட்டாட்சியர் அறித்துள்ளார். ஆனால் அதற்கு முந்தைய தேதியில் கொடுக்கப்பட்ட விருதாச்சலம் ஒன்றிய தலைவர் மீதான புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டத்தின் படி நடக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

 

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர், "தி.மு.க.வினரின் அரசியல் அதிகாரத்திற்கு அதிகாரிகள் துணை போகக் கூடாது. சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும். இல்லை என்றால் கட்சித் தலைமையிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்"  என்று தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.