Skip to main content

''அழுகாத... நானே உனக்கு புருஷனா கிடைப்பேன்...'' -தற்கொலைக்கு முன்பு கல்லூரி மாணவனின் உருக்கமான கடிதம்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
College student

 

 

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் நித்திஷ்குமார் தனியார் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். பின்னர் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டபோது, அமைந்தகரை பகவதி அம்மன் கோவில் அருகே உடலில் பச்சை குத்தும் (‘டாட்டூ’) கடையில் வேலை செய்து வந்தார்.

 

கடந்த இரணடு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நித்திஷ்குமார், அடுத்த நாள் காலை நீண்டநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை போனையும் எடுக்கவில்லை. பின்னர் வீட்டில் உள்ளவர்கள் நித்திஷ்குமாரின் தம்பியை என்ன ஆனது என கடைக்கு சென்று விசாரித்து வர அனுப்பியுள்ளனர். 

 

அங்கு கடையின் உள்ளே நித்திஷ்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவரது தம்பி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் தூக்கில் தொங்கிய நித்திஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நித்திஷ்குமார், ஆன்லைன் விளையாட்டில் விளையாடி வந்ததாகவும், அதில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 

மேலும் நித்திஷ்குமார் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “என்னோட இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை, நான் தான். மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த என்னோட பணத்தை எல்லாம் நான் விளையாட்டில் தோற்றுவிட்டேன். கடையில் இருந்தும் ரூ.20,000 எடுத்து விளையாடி தோற்றுவிட்டேன். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பைத்தியம் ஆகிவிட்டேன்.

 

நான் எடுக்கிற முடிவு தப்புதான். எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடுங்க சேகர் அண்ணா, உங்களை கேட்காம உங்க பணத்தை எடுத்து தப்பு பண்ணிட்டேன். அம்மா, அப்பா உங்களை எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும், மன்னிச்சிடுங்க.

 

என்னோட காதலிதான் என் உயிர். எல்லாமே அவதான். என்னை மன்னிச்சிரு. அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன். அழுகாத, வீட்டுல உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுப்பாங்க. என்னோட போன் பாஸ்வேர்டும் இதுதான்.

 

எல்லோருக்கும் தகவல் கொடுங்க, முக்கியமாக என் காதலிக்கு. கடைசியா அவ என்னை பார்த்ததும் என்னை தூக்கிட்டு போங்க. எல்லாருக்கும் சாரி, பணம் வென்றது. என் தம்பியை நல்லா பாத்துக்கோங்க” இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நித்திஷ்குமாரின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரது நண்பர்களிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.