Published on 13/02/2018 | Edited on 13/02/2018

ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாஜக தான் என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று இரவு நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது,
நாத்திக ஆட்சியை அகற்றி ஆத்திக ஆட்சியை கொண்டு வருவதே பாஜகவின் நோக்கம் என்றும், ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாஜக தான். தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண், அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ்.
பிரதமர் மோடி குறித்து குறை சொல்லும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பதவியில் இருந்தபோது தமிழகத்திற்காக என்ன செய்து விட்டார்? கட்சிக்கே தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு எப்படி முதல்வராவார்? இவ்வாறு அவர் பேசியுள்ளார்.