Skip to main content

94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல்... பழ.நெடுமாறன்

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு, சென்னை, டி நகரிலுள்ள அவரது வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் வந்தது, அதைத்தொடர்ந்து அவர் வீட்டைக் காலி செய்தார். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை...
 

nallakannu nedumaran



தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு அவர்களை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு அவரும் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கிறார். 94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

 

சார்ந்த செய்திகள்