Skip to main content

சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்!

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
citu


சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்களால் போராடிப்பெறப்பட்ட கட்டுமானம், ஓட்டுனர் உள்ளிட்ட 17 முறைசாரா தொழிலாளர் நலவாரியப்பணிகள் தற்பொழுது முடங்கிக் கிடக்கின்றனர். நலவாரியத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்து செயல்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளி இறந்தால் வாரிசுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, பொருளாளர் சி.அடைக்கலசாமி மற்றும் நிர்வாகிகள் ப.சண்முகம், பெரி.குமாரவேல், எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், செ.பிச்சைமுத்து, க.சிவக்குமார், சி.மாரிக்கண்ணு, வி.ஆண்டியப்பன், எஸ்.யோகராஜ், கே.ராசு, ஆ.மாயன், எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பணி நிரந்தரம் செய்யக் கோரி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் பேரணி (படங்கள்)

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

பணி நிரந்தரம் கோரி வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் சென்னை எழும்பூரில் பேரணி நடத்தினர். சி.ஐ.டி.யு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சங்கத்தின் தலைவர் கே.விஜயன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

ஒன்றிய அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் 2021ஆம் ஆண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.