Skip to main content

பட்டினியால் இறந்த தம்பதிகள்!!;மூன்று மகன்கள் இருந்தும் கேட்பாரற்று கிடந்த சோகம்!!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

தக்கலையில் வயதான தம்பதியினர் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு உணவில்லாமல், கவனிப்பு இல்லாமல் தோட்டத்து ஒதுக்குப்புற வீட்டில் இறந்து பலநாட்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Married couple who are starving

 

கன்னியாகுமரி மாவட்டம் சாரோடு அணை, தக்கலையை சேர்ந்த வயதான தம்பதிகள் செல்வம்-ஞானம்மாள். செல்வத்திற்கு வயது 90. ஞானம்மாளுக்கு வயது 85. இவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். முதல் மகன் இறந்துவிட இரண்டாவது மகன் பொன்னையன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகன் பொன்னுசாமி தக்கலையிலேயே அவரது மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.

 

SAD

 

இந்நிலையில் வயதான பெற்றோர்களை வீட்டில் சேர்த்தாமல் தோட்டத்திலுள்ள ஒரு ஒதுக்குப்புற வீட்டில் தங்கவைத்து விட்டு சென்றுவிட்டார் பொன்னுசாமி. வயது முதிர்ந்த இருவரும் உண்ண உணவின்றி, சரியான பராமரிப்பின்றி அந்த வீட்டிலேயே இருந்துவந்தனர். அந்த பகுதியில் வரும் சிலர் கொடுக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் தொகையை வைத்து தக்கலையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்கிவந்து தன் மனைவிக்கு உணவளித்து வந்தார் ஞானம்மாளின் கணவர் செல்வம். 

 

SAD

 

அப்படி அவர்கள் வாங்கும் அந்த உணவை நான்கு ஐந்து நாட்கள் வைத்து சாப்பிடும் அளவிற்கு இருவரும் யாருடைய கவனிப்புமே இல்லாமல் இருந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் மனைவி ஞானம்மாள் படுத்தபடுக்கையாக செல்வத்தின் நடமாட்டம் மட்டும் அவ்வப்போது அப்பகுதி மக்களுக்கு தெரியும். 

 

SAD

 

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நடமாட்டம் எதுவும் இல்லாத நிலையில் சிலர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறந்துவைத்த நிலையில் இருவரும் அழுகி துர்நாற்றத்துடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ந்து அவரது மகன் பொன்னுமசாமிக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பொன்னுசாமி வராததால் தகவல் போலீசாருக்கு சென்றது. உடனே போலீசார் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் இருவர் சடலத்தையும் மீட்டு அடக்கம் செய்ய உதவினர். அதன்பின் போலீசார் தரப்பில் மகன் பொன்னுசாமி அழைக்கப்பட்டதால் பொன்னுசாமி நேரில் வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஊர் மக்கள் வசை மொழிகளால் பொன்னுமசாமியை திட்டினர்.

 

SAD

 

 

SAD

 

பெற்ற தாய் தந்தையை கவனித்துக்கொள்ளாமல், இப்படி இறுதி காலத்தில் எந்த கவனிப்பும் இல்லாமல் அவர்கள் அனாதைகளை போல கேட்பாரற்று இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது. ''பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு'' என்பதற்கேற்ப தன்னுடைய பின் காலத்தில் தாமும் இந்த நிலைக்குதான் தள்ளப்படுவோம் என யோசிக்காமல் சிலர் வயதான பெற்றோர்களை சுமையாக நினைப்பதுதான் மனிதாபமின்மையின் உச்சம்.    

   

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.