Skip to main content

''முதல்வர் ஆளுநரை விரோதியைப் போல் பார்க்கிறார்''- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

 '' The Chief Minister repeatedly sees the Governor as something hostile '' - Vanathi Srinivasan

 

மாநில முதல்வர் ஆளுநரை விரோதியைப் போல் பார்ப்பதாக  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

'போஷன் அபியான்' எனும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வழங்குவது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ''ஊட்டச்சத்து குறைபாட்டினை குழந்தையிலேயே தாய் கர்ப்பிணியாக இருக்கும்போதே சரிசெய்துவிட்டால் அதுவே ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதனால் தான் 'போஷன் அபியான்' என்ற இந்த திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசின் நிதியுதவியோடு, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலத்தின் முதல்வர், ஆளுநர் என இருவருக்கும் தனித்தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைதான் உயர்ந்தது, அல்லது நீதித்துறைதான் உயர்ந்தது, அல்லது நிர்வாகத்தில் இருக்கக்கூடியவர்கள்தான் அமல்படுத்தி முடிவெடுக்கக்கூடியவர்கள், எனவே அவர்கள் உயர்ந்தவர்கள் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கிடையாது. ஆனால் முதல்வர் திரும்ப திரும்ப ஆளுநரை ஏதோ விரோதியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்.

 

சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் போட்டாலும் அதை அப்படியே ஆளுநர் அமல்படுத்த வேண்டும் என்பது கிடையாது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு சில வரைமுறைகள் உள்ளது. அப்படி ஆளுநர் சட்டப்படி நடக்கவில்லை என்றால் நீதித்துறையின் வாயிலாக நீங்கள் கேள்வி கேட்கலாமே தவிர தெருவில் இறங்கி ஆளுநரை அவமானப்படுத்துவதையோ, அசிங்கப்படுத்துவதையோ நிச்சயமாக பாஜக ஒத்துக்கொள்ளாது. இளையராஜா மோடியை ஆதரித்துப் பேசினால் பதவிக்காக பேசுகிறார் என்று சொல்கிறார்கள். அவர் மட்டுமல்ல மோடியை ஆதரித்து யார் பேசினாலும் பதவிக்காக, பயத்தால் பேசுகிறார்கள் அல்லது அவர்களுக்கு பின்னல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதேபோல் மோடியை விமர்சிக்கும் நபர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அந்த கேள்வியை நாங்கள் கேட்கிறோம். மோடியை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நபர்கள் அதுவும் மக்கள் பிரதிநிதிகளே அவருக்கு மரியாதை கொடுக்காமல் நடந்துகொள்கிறார்கள் என்றால் அவர்கள் பின்னால் இருப்பது யார்?'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.