Skip to main content

“நமது மாநகராட்சியை முதலமைச்சர் கண்காணிக்கிறார்..” - பட்ஜெட் கூட்டத்தில் மேயர் அன்பழகன் 

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

"The Chief Minister is overseeing our corporation." - Mayor Anpalagan at the budget meeting

 

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

கூட்டத்தில் 65வது வார்டு அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் பணி நடக்க வேண்டும். பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள டெண்டர்கள் வெளிப்படையாக இல்லாததால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இனிவரும் காலங்களில் வெளிப்படையாக நடத்த வேண்டும். தெற்கு தேய்கிறது வடக்கு வளர்கிறது..” என்று அவர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டனர். 

 

மீண்டும் அம்பிகாபதி பேசும்போது, “மேற்குத் தொகுதியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குகிறீர்கள்” என்று குற்றம் சாட்டினார். இதற்கும் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மேயர் அன்பழகன் பேசும்போது, “யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்துக்கொண்டு இங்கு பேசாதீர்கள்” என்று கண்டித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர்.

 

"The Chief Minister is overseeing our corporation." - Mayor Anpalagan at the budget meeting

 

கூட்டத்தின் இறுதியில் பேசிய மேயர் அன்பழகன், “24 மணி நேரமும் குடிதண்ணீர் சப்ளை செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது. நமது மாநகராட்சி பட்ஜெட் குறித்து அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தான் பெஸ்ட் என்று கூறுகின்றனர்.


திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், சாலைகள் குறித்து என்னிடம் கேட்டறிந்தார். நமது மாநகராட்சியை முதல்வர் கண்காணிக்கிறார். நமது மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தை முதல்வர் வாங்கிச் சென்றுள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மாநகரில் வர்த்தக மையம் அமைய உள்ளது.  


திருச்சி மாநகராட்சி விரைவில் விரிவுப்படுத்தப்பட உள்ளது. கவுன்சிலர்கள் நிதியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் உள்ள வாய்க்கால்கள் திறந்த நிலையில் உள்ளன. சென்னையில் உள்ளது போல், மேற்புறம் கான்கிரீட் தளம் அமைத்து கொட்டப்படுவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இந்த வருடமே நிறைவேற்றப்படும். கவுன்சிலர் அனைவருக்கும் ஐடி கார்டு விரைவில் வழங்கப்படும்” என்று அவர் பேசினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.