Skip to main content

சென்னை பெருங்குடி கொலை சம்பவம்; கொல்லப்பட்ட பெண் யாரென்ற அடையாளம் கண்டுபிடிப்பு!! பரபரப்பு விசாரணை!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21ம் தேதி கை, கால் துண்டுதுண்டாக பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட கொலை சம்பவத்தில் தற்போது துப்பு துலக்கியுள்ளனர் போலீசார்.

 

கொல்லப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில், துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என பள்ளிக்கரணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

 

 Chennai Perungudi murder case The identity of the woman who was killed Inquiry !!

 

 

சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்துவந்த சந்தியா என்ற அந்த பெண் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்திற்குச் சென்று அங்கு இருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட இருக்கின்றனர். அதேபோல் பாலகிருஷ்ணனிடம் இந்த கொலை தொடர்பான வாக்குமூலங்களை பெரும் முயற்சியில் பள்ளிக்கரணை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

எப்படி இந்த கொலை நடந்தது, சம்பந்தப்பட்ட பெண் சந்தியாவை அவர் எப்படி கொலை செய்தார், எந்த காரணத்திற்காக கொலை செய்தார் என்ற  முதல்கட்ட விசாரணையில் பாலகிருஷ்ணனின் மனைவியான சந்தியா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஐந்தும் முறை வீட்டை விட்டு வெளியேறியதாகவும் இதுகுறித்து பலமுறை பாலகிருஷ்ணன் எச்சரித்தும் சந்தியா கேட்க்காததால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் சந்தியாவை வெட்டி கொன்று உடல் பாகங்களை வீசி எறிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடல் பாகங்கள் எங்கு வீசப்பட்டது என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

கை, கால்கள் மட்டும் குப்பையில் கிடந்த நிலையில் அந்த பெண்ணின் உடலை எங்கே வீசினார் என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்