Skip to main content

பெண்கள் பாதுகாப்பில் சென்னைக்குதான் முதலிடம்- எடப்பாடி பழனிச்சாமி

Published on 30/09/2018 | Edited on 30/09/2018

 

eps

 

இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்றார்.

 

மேலும் பேசுகையில், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தால் அவரது திரைப்படம் போலவே 100 நாட்கள்தான் இருக்கும் என கூறியவர்கள் தற்போது கோட்டை பக்கமே வரமுடியாத நிலையில் உள்ளனர். திரை உலகிலிருந்து அரசியலுக்கு வந்து முதல்வரான ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்தான். அதேபோல்  ஆட்சிக்கு வந்தபின் முதல்முறையாக ரூ.330 கோடி விவசாய கடனை ரத்து செய்தவர் எம்.ஜி.ஆர் தான் என புகழாரம் சூட்டினார். 

 

சார்ந்த செய்திகள்