Skip to main content

சென்னை புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Chennai Book Fair Date Notification

47வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது எனத் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 4.30 மணிக்குத் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் புத்தகக் கண்காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையில் நடைபெறும்.

வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் நாள்தோறும்  மாலை நடைபெறும் சிந்தனை அரங்கில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்துறை ஆளுமைகள் உரையாற்ற உள்ளனர். 

சார்ந்த செய்திகள்