Skip to main content

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Chance of rain in 11 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கரூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (04.07.2024) இரவு 08.30 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதே சமயம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கரூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடரும் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Continued rain; Warning to fishermen

தமிழகத்தில் ஜூலை 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி 5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் 4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வானிலை குறித்த பல்வேறு அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 5 முதல் ஜூலை 10ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய, வடக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

 

Next Story

மழைநீருடன் தேங்கிய கழிவுநீர் - பொதுமக்கள் தர்ணா

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Stagnant sewage with rainwater - Public dharna

தமிழகத்தில் ஜூலை 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி 5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் 4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் சாலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நின்றதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து தேங்கிய நீர் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

புளியந்தோப்பு பகுதியில் டிகாஸ்டர் சாலை, பாடிசன் சந்து உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரில் கலந்து முழங்கால் அளவிற்கு தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகக்கூட வெளியே செல்ல முடியாமல் பெண்கள் தவித்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.