Skip to main content

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Chance of heavy rain in Tamil Nadu for 5 days

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று(6.1.2024) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை(7.1.2024) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஆம் தேதி திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய நான்கு மாவட்டங்களிலும், 9 ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும், 10 ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்