Skip to main content

“மத்திய அரசு அதை காதில் போட்டுக்கொள்வதாக தெரியவில்லை” - அய்யாக்கண்ணு பேட்டி!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

"The central government does not seem to listen to it" - Ayyakkannu interview

 

மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்துவருவதாகவும், விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்க மறுப்பதாகவும் தொடர்ந்து விவசாயிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். டெல்லியில் போராடிக்கொண்டிருக்க கூடிய விவசாயிகளின் குரலைக் கேட்க மத்திய அரசு இதுவரை தயாராக இல்லை. அவர்கள் ஒருபக்கம் செவிமடுக்க மறுத்தாலும், மத்திய அரசு என்ன நினைத்ததோ அதைச் செயல்படுத்த தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. எனவே மத்திய அரசின் நிலைப்பாட்டைக் குறித்து கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

சாலையில் அமர்ந்தும், சாலையில் உருண்டும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை விவசாயிகள் பதிவுசெய்துவரும் நிலையில், அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்று தொடர்ந்து விவசாயிகளாகிய நாங்கள் வலியுறுத்திவருகிறோம். ஆனால் மத்திய அரசு அதைக் காதில் போட்டுக்கொள்வதாக தெரியவில்லை. அணை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் உரிய இடத்திற்கு தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நடைபெறுவதைப் பார்த்தால் அரசு அனுமதி அளித்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும், “தென்பெண்ணையாற்றில் தடுப்பணையைக் கட்டி முடித்துவிட்டார்கள். உடனடியாக அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளுக்கான சமூகநீதி என்று பேசும் மத்திய அரசானது சாதிவாரியான கணக்கெடுப்பை எடுத்து, அதன் பின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தற்போது விவசாயிகள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.