Skip to main content

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் 

Published on 06/01/2024 | Edited on 06/01/2024

 

தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் பிராட்வேயில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு நேற்று (5ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சார்ந்த செய்திகள்