Published on 30/10/2018 | Edited on 30/10/2018

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேரும் குண்டர்தடுப்புச் சட்டத்தில் சிறையில் உள்ளனர். 17 பேர் மீதும் குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரி என்று அறிவுரைக்கழகம் உறுதி செய்திருந்தது.
இந்நிலையில் 17 பேரையும் இன்று மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் போலீசார். 14 பேருக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே, அவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 3 பேருக்கு சொந்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். நீதிமன்ற அறைக்கதவுகள் மூடப்பட்டு 17 பேரிடமும் நீதிபதி மஞ்சுளா விசாரணை நடத்தினார்.
அப்போது 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை நவம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.