Skip to main content

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீது வழக்கு... 5 பேர் கொண்ட குழு அமைப்பு!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Case against OPS, Rabindranath ... Group of 5 people!

 

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்கினை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. 

 

தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான   ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் இவரது மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ரவீந்திரநாத் ஆகிய இருவர் மீதும் தேனி மாவட்ட முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மிலானி, தேனி மாவட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30- ஆம் தேதி அன்று தனித்தனியே இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். 

 

அதில், கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது பிரமாண பத்திரத்தில் முழுத்தகவல் தெரிவிக்கவில்லை. சொத்து விபரம், வருமானத்தை மறைத்துள்ளனர். பொய்யான தகவல் கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

 

இந்த மனுக்களை மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் விசாரித்தார். அதன் அடிப்படையில் தனித்தனி உத்தரவுகள் பிறப்பித்தார். அந்த உத்தரவில், புகார்கள் தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை அறிக்கையை பிப்ரவரி 7- ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இருவரையும் வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடாது. எதிர் மனுதாரர்கள் அரசியல் செல்வாக்கு இருப்பதால், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் படி, மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, 156 (3) பிரிவின் கீழ் ஓ.பன்னீர்செல்வம்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரவீந்திரநாத் எம்.பி., மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 156 (3) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், ரவீந்திரநாத் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனு ஆவணங்களை  இக்குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.