Skip to main content

200 அடி உயரத்தில் பறந்த கார்... அதிர்ந்த தேயிலைத் தோட்ட ஊழியர்கள்!

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

The car that flew at a height of 200 feet ... the trembling Nilgiri tea plantation staff!

 

நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் என்ற பகுதியில் உள்ள தேயிலைத்தோட்டத்தில் திடீரென பயங்கர சத்தம் கேட்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவரும் மக்கள் எழுந்து ஓடிச் சென்று பார்த்தனர். அப்பொழுது சினிமா காட்சிகளில் வருவதுபோல் கார் ஒன்று சுமார் 200 அடி தூரம் மேலே பறந்து தேயிலைத் தோட்டத்தின் பகுதியில் பலமுறை உருண்டு கீழே விழுந்தது. இந்த காட்சியைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ந்தனர். சினிமாவில் வரும் காட்சிபோல் நிகழ்ந்த அந்த சம்பவத்தைப் பார்த்து பதறியடித்துக்கொண்டு மக்கள் அங்கு சென்று பார்க்கையில், உண்மையிலேயே அது சினிமா ஷூட்டிங்தான் என்ற தகவலறிந்து அவர்கள் ஆசுவாசமாகினர்.

 

கரோனா கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டுவரும் நிலையில், குளிர் நிறைந்த நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா ஷூட்டிங் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், நாகார்ஜுனா நடித்துவரும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக நீலகிரியில் நடந்துவந்துள்ளது. அப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஷூட்டிங்கில் தான் தூதூர்மட்டம் தேயிலைத்தோட்டத்தில் கார் பறந்த இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சிகள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.