Published on 29/07/2018 | Edited on 29/07/2018

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை சபாநாயகர் தனபால் காவேரி மருத்துவமனைக்கு சென்று கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
கடந்த 26ஆம் தேதி வியாழக்கிழமை கோபாலபுரம் இல்லத்தில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.