Skip to main content

புதிய ஆழ்துளை கிணற்றுக்கு கற்பூர தீபம்!! குபீரென பற்றியெரிந்த தீ

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

 

fire

 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் புதிதாக அமைப்பட்ட ஆழ்துளை கிணற்றிலுருந்து குபீர் என தீ பிளம்பு ஏற்பட்டு பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தளவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் அவரது விவசாய நிலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டினர். அந்த ஆழ்துளை கிணற்றுக்கு நேற்று மின் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் நீர் எடுத்துவிடலாம் என உற்சாகத்துடன் பக்கத்திலுள்ள பெரியவர்கள், உறவினர்களுடன் சென்று தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்.

 

fire

 

அப்போது பூஜைகள் செய்து சூடம் காட்ட ஆழ்துளை பக்கம் சென்றபோது குபீர் என குழாய் தீ பற்றி எரிந்தது. பதறிய அக்கம் பக்கத்தினர் நீரை குடம் குடமாக ஊற்றியும் தீ அணையவில்லை. இதனால் பீதி அடைந்த ஏழுமலை தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்க தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். 

 

மேலும் விழுப்புரம் வேதியியல் ஆய்வு கூடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்ட குபீர் தீ அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.   

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.