Skip to main content

ஒரே தூக்கு கயிற்றில் தொங்கிய இளம்பெண், பச்சிளம் பெண் சிசு சடலங்கள்! காவல்துறை தீவிர விசாரணை!! 

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

The bodies of a young girl and a baby girl selam thalaivasal Police are conducting a serious investigation !!

 

 

தலைவாசல் அருகே, பூட்டிய வீட்டுக்குள் ஒரே தூக்குக் கயிற்றில் பச்சிளம் பெண் குழந்தையும், தாயும் சடலமாகத் தொங்கிய சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள உமையாள்புரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் தவமணி (27). இவருக்கும், சார்வாய் புதூரை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவருக்கும் 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

 

கூலித்தொழிலாளியான மணிகண்டன் ஏற்கனவே திருமணமானவர். அவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகுதான் தவமணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 

 

இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தவமணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார். 

 

The bodies of a young girl and a baby girl selam thalaivasal Police are conducting a serious investigation !!
                                                             தவமணி


கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, மாமனார் வீட்டுக்கு நேரில் சென்றிருந்த மணிகண்டன், மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் நவ.3ம் தேதி மாலை பெரியசாமிக்கு செல்ஃபோனில் தொடர்பு கொண்ட உறவினர் ஒருவர், தவமணியும் குழந்தையும் இறந்து விட்டதாக தகவல் சொல்லியுள்ளார். 


இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுடன் சார்வாய் புதூருக்கு வந்தார். அங்கு பூட்டிய அறைக்குள் தவமணியும், குழந்தை யாஷிகாவும் சடலமாகத் தொங்கினர். பெரியசாமியும் உடன் வந்த உறவினர்களும் கதவை உடைத்து உள்ளே சென்று சடலங்களை மீட்டனர். 


இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்தனர். சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக பெரியசாமி புகார் அளித்தார். திருமணம் ஆன 5 ஆண்டுக்குள் இளம்பெண், பச்சிளம் பெண் குழந்தையுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால், காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 

 

தவமணியின் மரணத்துக்கு உடனடியாக காரணம் தெரியவில்லை. கணவரிடமும், அவருடைய பெற்றோர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பெண் குழந்தை பிறந்ததால் அவரை ஏளனமாக பேசியதால் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யாராவது கொன்று தூக்கில் தொங்க விட்டனரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பச்சிளம் பெண் குழந்தையும், தாயும் மர்மமான முறையில் தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்