Skip to main content

இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல்: 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு..

Published on 01/02/2021 | Edited on 02/02/2021

 

bjp kalyanaraman arrested by police

 

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை கண்டித்து திருச்சி அரியமங்கலத்தில் இஸ்லாமிய அமைப்பினர் நேற்று (31.01.2021) நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘மேட்டுபாளையத்தில் பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமியர்கள் மதிக்கக்கூடிய நபிகள் நாயகத்தை இழிவாகப் பேசினார். இதனைக் கண்டித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட’தாக தெரிவித்தனர். 

 

நேற்று நள்ளிரவில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா பக்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று சேர்ந்து கல்யாணராமனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை கைது செய்யக் கோரியும் 400க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

இதனிடையே  கல்யாணராமனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விபரத்தைப் போராட்டக்காரர்கள் உறுதிசெய்த பின்னர் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சியில் நடந்ததுபோல் இனாம்குளத்தூர், சென்னை, கோயமுத்தூர், திண்டுக்கல் ஆகிய பல்வேறு மாவட்டங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.

 

சார்ந்த செய்திகள்