Skip to main content

தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி நடத்தி வருகிறது: சீமான் பேட்டி

Published on 15/06/2018 | Edited on 15/06/2018
seeman


தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி நடத்தி வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 

விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்குள் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றார்.

 

 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 
 

திருச்சி விமானநிலையத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக என் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். அன்றைய தினம் சம்பவ இடத்திலேயே நான் இல்லை. ஆனால் என் மீது 2 வழக்குகள் பொய்யாக புனையப்பட்டுள்ளது. என் மீது இன்று, நேற்று அல்ல. 10 வருடமாக வழக்குகள் போட்டு வருகிறார்கள். இவ்வாறு வழக்கு போடுவது அரசின் இயலாமையையும், தோல்வியையும் தான் காட்டுகிறது. தொட்டதற்கெல்லாம் வழக்கு போட்டு சிறையில் தள்ள நினைக்கிறார்கள்.

 

 

 

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். மொத்தமாக 18 எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் இந்த ஆட்சி கேள்விக்குறியாகிவிடும் என்பதால், இப்படி ஒரு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி நடத்தி வருகிறது.

 

 

 

நீண்டகாலமாக சட்டமன்ற, பாராளுமன்ற ஜனநாயகம் இல்லை. நீதிமன்ற ஆட்சி முறை தான் உள்ளது. நீதிமன்றத்தில் கேட்டு தான் எதனையும் பெறவேண்டிய நிலை உள்ளது. நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது. இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.